முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2021-ம் ஆண்டுக்குள் மம்தா அரசு கவிழும் - பா.ஜ.க.

புதன்கிழமை, 5 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : வருகிற 2021-ம் ஆண்டுக்குள் மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான அரசு கவிழும் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

திரிணாமுல் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளை கைப்பற்றியது.  ஆனால், கடந்த தேர்தலில் 2 இடங்களை பெற்றிருந்த பா.ஜ.க. இந்த முறை அதிக தொகுதிகளை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரசுக்கு அதிர்ச்சி அளித்தது. இதனை தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.  தொடர்ந்து 6 எம்.எல்.ஏ.க்கள் இணைய உள்ளனர் என அக்கட்சி கூறியிருந்தது.  இதனால், குதிரை பேரத்தில் பா.ஜ.க. ஈடுபடுகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்தது.

தயாராகி வருகிறோம்...

இந்த நிலையில், பா.ஜ.க.வின் தேசிய பொது செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா செய்தியாளர்களிடம் கூறும் போது, 2021-ம் ஆண்டு வரை மேற்கு வங்காள முதல்வராக மம்தா பானர்ஜி நீடிப்பார் என நான் நினைக்கவில்லை. இதுபற்றி இப்பொழுதே கூறுவது என்பது சரியாக இருக்காது.  2021 தேர்தலுக்காக நாங்கள் தயாராகி வருகிறோம். ஆனால் இந்த அரசு தன்னாலேயே கவிழும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து