முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளவால் கடியால் நிபா வைரஸ் பரவிடும் என அச்சம்! திருமங்கலம் பகுதியில் பழங்கள் விற்பனை மந்தம்!!

வியாழக்கிழமை, 6 ஜூன் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- வெளவால்களால் கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் வெகுவாக பரவிவரும் நிலையில் வெளவால் கடித்த பழங்களால் நிபா வைரஸ் பரவிடும் என்ற அச்சத்தினால் திருமங்கலம்,டி.கல்லுப்பட்டி மற்றும் பேரையூர் பகுதிகளில் பழங்களின் விற்பனை மந்தமாக உள்ளது.
கேரள மாநிலத்தில் மக்களின் உயிருக்கு உலை வைத்திடும் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால்  100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிலர் இறந்திருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.பெரும்பாலும் நிபா வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ள வெளவால்கள் கடித்த பழங்களை சாப்பிடுவதால் பொதுமக்களுக்கு நிபா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்நிலையில் பழம் திண்ணி வெளவால்கள் கடிப்பதால் அவற்றின் உமிழ்நீர்,சிறுநீர்,மலம் போன்றவை பழங்களில் பட்டு அதன்மூலம் மூளையை தாக்கி செயலிழக்கச் செய்திடும் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கேரள மாநிலத்து மலைப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு ஆயிரக்கணக்கில் வரும் வெளவால்கள் பழங்களை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளன.
இதே போன்று திருமங்கலம் அருகேயுள்ள நாகமலை கணவாய் பகுதியில் உள்ள வவ்வா பொடவு,திருமங்கலம் மதுரை சாலையிலுள்ள தனியார் நிறுவனத்து மரங்களில் ஆயிரக்கணக்கான ராட்சத வெளவால்கள் தங்கியுள்ளன.இரவு நேரங்களில் மட்டுமே பறந்திடும் இந்த வெளவால்கள் திருமங்கலம் பகுதியிலுள்ள பழத்தோட்டங்கள் மற்றும் கொடைகானல், மூணாறு,குமுளி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள எஸ்டேட்களில் விளைந்திடும் பழங்களை உண்பதை வழக்கமாக கொண்டுள்ளன.இந்நிலையில் பழம் திண்ணி வெளவால்களால் நிபா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் திருமங்கலம் பகுதியிலுள்ள வெளவால்கள் மூலமாகவும்,கேரளாவிலிருந்து வரவழைக்கப்படும் பழங்கள் மூலமாகவும் நிபா வைரஸ் பரவிடலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.இதனால் திருமங்கலம் டி.கல்லுப்பட்டி பேரையூர் ஆகிய பகுதிகளில் பழங்களின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.குறிப்பாக கேரள மாநிலத்து மலைப்பழங்களான வாழை,திராட்சை, சப்போட்டா,கொய்யா போன்றவற்றின் மூலமாக நிபா வைரஸ் பரவிடும் என்று பரவிய தகவல்களால் பொதுமக்கள் பழங்களை வாங்கிச் செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர்.அதே சமயம் திருமங்கலம் பகுதியிலும் வெளவால்கள் அதிகளவு காணப்படுவதால் திருமங்கலம் பகுதி தோட்டங்களிலுள்ள பழங்களை வெளவால் கடித்திருக்கும் என்ற அச்சத்தாலும் பழங்களின் விற்பனை பெருமளவு சரிந்துள்ளது என்று பழக்கடைக்காரர்கள் புலம்புகின்றனர்.
காய்ச்சல்,தலைவலி,மயக்கம்,குழப்பமான மனநிலை,கோமா பின்னர் சிலநாட்களில் மரணம் என நிபா வைரஸ் தாக்கிய சில நாட்களிலே எல்லாம் முடிந்து விடுகிறது.இந்த நோயை தடுப்பதற்கு தடுப்பூசிகள் ஏதும் இல்லாத நிலையில் இதற்கான முறையான சிகிச்சை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானால் 70சதவீதம் மரணம் நிச்சயம் என்று கூறப்படும் நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம்,டி.கல்லுப்பட்டி மற்றும் பேரையூர் பகுதிகளில் வெளவால் கடித்த பழங்களால் நிபா வைரஸ் பரவிடும் என்ற அச்சத்தால் பழங்களின் விற்பனை மந்தமாகி குறைந்திருப்பது பழவியாபாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து