எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடி ஒன்றியத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பயன்பெற்றிடும் வகையில் ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.79லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேற்கொள்ளப்பட்ட வறட்சி நிவாரண திட்டப்பணிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் டி.கல்லுப்பட்டி,பேரையூர் பேரூராட்சிகள் மற்றும் திருமங்கலம்,கள்ளிக்குடி,டி.கல்லுப்பட்டி ஒன்றியங்களில் 216 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.வைகை ஆற்றினை நீராதாரமாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தற்போது நிலவிடும் கடுமையான வறட்சி காரணமாக கடைக்கோடி கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.இதை தொடர்ந்து கடைநிலை குடியிருப்புகளுக்கு கோடை காலத்தில் தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்காக பிரதான மேல்நிலைத் தொட்டி,பிரதான தரைமட்டத் தொட்டிகளின் அருகில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி கள்ளிக்குடி ஒன்றியத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை,தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடி ஒன்றியத்திலுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ரூ.79லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் அதனைச் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு 76 குடியிருப்பு மக்களுக்கு 3.91லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக கிடைத்திட வறட்சி நிவாரண திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டது.இந்த வறட்சி நிவாரண திட்டங்களின் துவக்க விழா நேற்று கள்ளிக்குடி ஒன்றியம் அகத்தாபட்டி மற்றும் வில்லூர் கிராமங்களில் சிறப்புடன் நடைபெற்றது.இவ்விழாவிற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர்(பொ) ரவீந்திரன்,நிர்வாக பொறியாளர் ஹரிபாஸ்கரன்,உதவி நிர்வாக பொறியாளர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் யூனியன் சேர்மன்கள் மகாலிங்கம்,தமிழழகன் ஆகியோர் வரவேற்றனர்.
ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட இவ்விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமையேற்று கள்ளிக்குடி ஒன்றியத்தில் ரூ.79லட்சம் மதிப்பீட்டில் வறட்சி நிவாரண திட்டபணிகள் மூலம் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் அதனைச் சார்ந்த பணிகளையும் திறந்து சிறப்புரையாற்றினார். அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: தமிழ்நாடு முழுவதிலும் இருக்கிற 32 வருவாய் மாவட்டங்களில் கோடைகால வறட்சியின் போது நமக்கு பருவமழை பெய்திடாமல் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தாலும் அதை சமாளித்திடவும் மக்களுக்கு தேவையான குடிநீரை பற்றாக்குறையின்றி வழங்கிடவும் முதல்வரும் துணை முதல்வரும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார்கள்.வறட்சி காலத்தில் மக்கள் குடிநீர் இன்றி அவதிப்படக்கூடாது என்பதற்காக வறட்சி நிவாரண நிதியின் கீழ் குடிநீர் ஆதாரங்களை பெருக்கிட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் தாகத்தை தீர்ப்பதில் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது.வறட்சி காலத்தில் கூட்டுகுடிநீர் திட்டத்தின் இணைப்பின் அருகிலிருப்பவர்களுக்கு குடிநீர் இலகுவாக கிடைத்து விடுகிறது.ஆனால் கடைசி பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேர்வது சவாலான பணியாகும்.இதன் தொடர்ச்சியாக தண்ணீர் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் வறட்சி நிவாரண நிதியைக் கொண்டு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது.மக்கள் பணியில் பல சவாலான கால கட்டங்கள் வருவது உண்டு.பருவமழை பொய்த்தாலும் கூட மக்களின் ஒத்துழைப்புடன் மாற்று நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் எங்கும் குடிநீர் பற்றாக்குறை இல்லை என்ற நிலை உருவாக்கிடஇது போன்ற திட்டங்களை அம்மாவின் அரசு உங்களுக்கு அர்ப்பணித்துள்ளது.திருமங்கலம் தொகுதியின் அனைத்து ஊரக குடியிருப்புகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்கெல்லாம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதோ அங்கு கழக தொண்டர்கள் மூலம் லாரிகளில் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிட அனுமதி வழங்கிடுமாறு முதல்வரிடம் நான் அனுமதி கேட்டிருக்கிறேன்.
சில எதிர்கட்சிகளின் தூண்டுதல் காரணமாக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திட மறியல்கள் நடத்தப்படுகிறது.கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிட ரூ.242கோடி முதல் கட்டமாக நிதி வழங்கபட்டு தற்போது 3வது கட்டம் வரை நிதி வழங்கப்பட்டிருக்கிறது. திருமங்கலம் பகுதியில் தற்போது மழை பெய்து பூமி குளிர்ந்தது போல் நமது உள்ளமும் குளிர்கிறது.குடிநீர் விநியோகத்தில் தமிழக முதல்வர் தணிகவனம் செலுத்தி வருகிறார்.மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தந்திடும் போது குடிநீர் பற்றாக்குறையை சமாளித்திட அதிக திட்டங்களை செயல்படுத்திட வாய்ப்பு உள்ளது.குடிநீர் பற்றாக்குறையை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் பெற்றிட முயற்சிக்கிறார்கள்.அதற்கு பொதுமக்கள் ஒருபோதும் இடம்கொடுக்கக்கூடாது.அதை வைத்து அரசியல் ஆதாயம் தேட எதிர்கட்சிகள் முயற்சிக்கிறார்கள்.தடைகளை அனைத்தையும் தகர்த்து தமிழக மக்களுக்கு தேவையான குடிநீரை தங்கு தடையின்றி அம்மாவுடைய அரசு நிச்சயமாக கொடுத்திடும்.இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,டிகல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,கல்லுப்பட்டி முள்ளான் துணை சேர்மன் பாவடியான்,கள்ளிக்குடி முன்னாள் துணைச் சேர்மன் கண்ணன்,அவைதலைவர் வேல்பாண்டி,துணைச்செயலாளர் பிரபுசங்கர்,வேல்ராமகிருஷ்ணன் கட்சி நிர்வாகிகள் ராஜா,வில்லூர் சரவணன்,ரவி,சாமிநாதன்,ஆதி(எ)ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்0 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.