முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல வசனகர்த்தாவும் - நகைச்சுவை நடிகருமான கிரேசி மோகனின் மறைவுக்கு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பிரபல வசனகர்த்தாவும் - நகைச்சுவை நடிகர் கிரேசி மோகனின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கலைமாமணி விருது

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், திரைக்கதை வசனகர்த்தாவும், திரைப்பட நடிகருமான கிரேசி மோகன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். கிரேசி மோகன், கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே நாடகங்களை எழுதத் தொடங்கினார். இவர், மாது மிரண்டால், சாட்டிலைட் சாமியார், சாக்லேட் கிருஷ்ணா, மதில் மேல் மாது போன்ற பல நகைச்சுவை நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். அதுமட்டுமின்றி,  பல வெற்றிப் படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். கிரேசி மோகனின் கலையுலக சேவையை பாராட்டி  தமிழ்நாடு அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது. 

பேரிழப்பாகும்... 

அனைவரிடமும் அன்பாக  பழகக்கூடியவரும், நாடகத்துறை மற்றும் திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவருமான கிரேசி மோகனின் மறைவு தமிழ் நாடகத்துறைக்கும், திரைத்துறைக்கும் ஒரு  பேரிழப்பாகும்.  கிரேசி மோகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக மற்றும் நாடகத் துறை நண்பர்களுக்கும்  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல  இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து