எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நடப்பாண்டில் 24 லட்சத்து 20 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
ஆய்வு செய்ய...
சென்னை ராஜா அண்ணாமலைப்புரத்தில் செட்டிநாடு வித்யாசிரமம் பள்ளியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிகாரிகளுடன் நேற்று பள்ளி வாகனங்களின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார். இதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோடைக்கால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதும் பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்த பின்னரே இயக்கப்பட வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதே வழியில் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
1,433 வாகனங்கள்...
தமிழகத்தில் 32 ஆயிரத்து 576 பள்ளி வாகனங்கள் இருக்கின்றன. இதில் 31 ஆயிரத்து 143 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஆயிரத்து 9 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு தீர்வு காணப்பட்ட பின்னர் தான் இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் ஆயிரத்து 433 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். அதையும் ஆய்வு செய்த பின்னரே அவற்றை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவை ஆய்வு செய்த பிறகே குழந்தைகளை அழைத்து செல்ல அனுமதிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக பள்ளி வாகனங்களை அதிகாரிகளுடன் ஆய்வு செய்துள்ளேன்.
அதிகாரிகளுக்கு...
தமிழகத்தில் சென்ற ஆண்டு 20 லட்சத்து 55 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 24 லட்சத்து 20 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்பட வேண்டும். அதற்குரிய ஒப்பந்தப் புள்ளிகளுக்கு வரும் 17-ம் தேதி கடைசிநாள். ஒப்பந்தப் புள்ளிகள் முடிந்ததும் இலவச பஸ் பாஸ் வழங்கும் பணி விரைவில் தொடங்கும். இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார். அது வரை பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே போதும் அவர்களிடம் பஸ் பாஸ் கேட்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சீருடை அணிந்திருந்தாலே பேருந்துகளில் மாணவர்களை அனுமதிக்கலாம் என்று போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் தங்களது பழைய பயண அட்டையை காண்பித்தாலே அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம்.
மின்சார பேருந்து...
தமிழகத்தில் மின்சார பேருந்து இயக்குவதற்காக இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் நடைபெற்ற அதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார். முதற்கட்டமாக, சென்னை, மதுரை கோவை ஆகிய மாவட்டத்தில் 500 பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் மானியத்தில் மின்சார பேருந்துகள் தமிழகத்தில் விரைவில் இயக்கப்படும். மேலும் உலக அளவில் வெப்பமயமாதலை தடுப்பதற்கான 12 ஆயிரம் மாசில்லா பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கிராமங்களில்...
ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அமல்படுத்தும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்ற உத்தரவு குறித்து மாநகரங்களில் விழிப்புணர்வு அதிகளவு இருக்கிறது. எனவே அதிகமான எண்ணிக்கையில் நகரங்களில் வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிகிறார்கள். அந்தளவுக்கு கிராமங்களில் விழிப்புணர்வு இல்லை. கிராமப்புறங்களில் குறைவான மக்களே ஹெல்மெட் அணிகிறார்கள். போக்குவரத்துத் துறையினரும், போலீசாரும் லட்சக்கணக்கானோரிடம் ஆய்வு செய்து அபராதம் விதிக்கிறார்கள். ஹெல்மெட் கட்டாயமாக்கும் சட்டத்தை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நிறைவேற்றுவோம்.
எலெக்ட்ரானிக் மீட்டர்...
பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் போதே வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். அவை அதிகமாக இருந்தால் அவை முறைப்படுத்தப்படும். மக்களிடமிருந்து அது குறித்து கோரிக்கை வந்தால் உரிய வகையில் பரிசீலிக்கப்படும். ஆட்டோக்களுக்கு எலெக்ட்ரானிக் மீட்டர் அமைப்பது குறித்து ஒப்பந்தப்புள்ளிகள் போடப்பட்டு விட்டன. மிக விரைவில் எலெக்ட்ரானிக் மீட்டர்கள் பொருத்தப்படும். அந்த எலெக்ட்ரானிக் மீட்டரிலேயே கட்டணத்திற்குரிய ரசீது வரும். அந்த மீட்டரிலேயே பயணிகளுக்கான புகாரும் பெறப்பட்டு அதற்கான கட்டுப்பாட்டறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேமராக்கள் மூலம்...
அரசு பேருந்துகள் 80 கி.மீ. வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் வேகத்தில் பேருந்துகள் செல்லாது. 22 ஆயிரம் பேருந்துகள் இருப்பதால் விபத்துக்கள் அதிகம் நடப்பதை போல் தெரிகிறது. வேகக்கட்டுப்பாட்டை மீறி விபத்துக்கள் நடைபெற்றாலும் கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டு பேருந்து ஒட்டுனர் மீது தவறிருந்தால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் அரசு பேருந்துகள் மூலமான விபத்து முன்பை விட குறைத்திருக்கிறது என்பதே உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.