முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் ரோமியோ தடுப்பு படை - உ.பி. முதல்வர் யோகி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : உ.பி.யில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடைய ஆண்களை தொடர்ச்சியாக கண்காணிக்க போலீசுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரபிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் கடந்த 2017-ல் பொறுப்பேற்ற பின் பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதைத் தடுப்பதற்காக ரோமியோ தடுப்புப் படை என்ற பெயரில் காவல்துறை குழுக்களை அமைத்தார். இதன்படி பொது இடங்களில், சாதாரண உடை அணிந்த பெண் காவலர்கள் ரகசியமாக ஊடுருவி கண்காணித்தனர். இதனையடுத்து பெண்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது காதலர்களும் பாதிப்புக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியது.

இப்போது மாநிலத்தில் சிறுமி கொடூரமான கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல் செய்தி அங்கிருந்து தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் உ.பி.யில் மீண்டும் ஆன்டி ரோமியோ படையை செயல்படுத்த போலீசுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடையவர்களை தொடர்ச்சியாக கண்காணிக்கவும், கிராமங்களில் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.  பெண் போலீசாரை இதுபோன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து