முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17-வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி : 17-வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க. எம்.பி. வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.  

புதிய சபாநாயகர்...

சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதீத பெரும்பான்மையுடன், பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்து கொண்டது. இதேபோல் பிரதமர் மோடி 2-வது முறை பிரதமராக பதவியேற்றார். இதனிடையே, 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வருகிற ஜூன் 17-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் 2 நாளில் புதிய எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்கள். 19-ம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார். 20-ம் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். ஜூலை 26-ம் தேதி கூட்டத்தொடர் முடிகிறது. ஜூன் 19-ம் தேதி மக்களவைக்கான புதிய சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது.

இடைக்கால...

இந்நிலையில், மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க. எம்.பி. வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின் திகம்ஹர் மக்களவை தொகுதியில் இருந்து வீரேந்திர குமார் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து