முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் - 1, பிளஸ் - 2 வகுப்புகளில் 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் : பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு

வியாழக்கிழமை, 13 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று விகிதாச்சார முறையை மாற்றி பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு கல்வித்தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.புதிய பாடத் திட்டங்கள் தொடங்கி கற்பித்தல் முறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு படிக்கின்ற மாணவர்கள்- ஆசிரியர் விகிதாச்சார முறை மாற்றப்பட்டுள்ளது.

இதுவரையில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் நிர்ணயிக்கப்பட்டு கற்பித்தல் நடைபெற்றது. இப்போது 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித் துறையின் மூலம் அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் இதுபற்றி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போது பிளஸ்-1 வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. புதிய வகுப்புகளில் மாணவர்கள் புதிய விகிதாச்சார அடிப்படையில் கற்பித்தல் முறையை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து