முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர், கவர்னரை சந்தித்தது வழக்கமான நடைமுறை தான் - அமைச்சர் ஜெயகுமார் பதில்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கவர்னரை சந்தித்தது வழக்கமான நடைமுறை தான் அமைச்சர் ஜெயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

உடற்பயிற்சி மையம்

சென்னை சாந்தோம் பகுதியில் ரூ 30 லட்சம் மதிப்பிலான நவீன உடற்பயிற்சி மையம் நேற்று திறக்கப்பட்டது. மீன்வளத்துறை மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் அதனை திறந்துவைத்தார்,அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கவர்னரை சந்தித்தது வழக்கமான நடைமுறை தான், அது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு, அம்மாவின் ஆட்சி மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது,அது குறித்து விளக்குவதும் விவரிப்பதும் காலாகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வாடிக்கையான விசயம் தான்.

ஏமாற்றம்தான்...

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியனும், சி.வி.சண்முகமும் வராதது குறித்து கட்சித் தலைமைக் கழகத்திற்கு உரியவகையில் முன்கூட்டியே தெரிவித்து விட்டார்கள். அவர்கள் தங்களது உறவினர்களின் உடல் நலக்குறைவு காரணமாகவே வரவில்லை. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரிய பிரளயம் ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பார்த்தார்கள் எதுவுமே நடக்காதது அவர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது. ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் தேவையற்ற ஒன்று. அது ஒரு பிரச்னையே அல்ல என்றார் அமைச்சர் ஜெயகுமார்.

உடற்பயிற்சி நிலையத்திறப்பு திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயகுமார் தாண்டால் எடுத்து உடற்பயிற்சி மேற்கொண்டார். இதில் மயிலாப்பூர் எம்.எல்ஏ நட்ராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து