முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய ' கிரிக்கெட் பேட்' - பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு

சனிக்கிழமை, 15 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

சென்னை : சென்னை பீனிக்ஸ் மாலில் வைக்கப்பட்டுள்ள, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டையை முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் திறந்து வைத்தார்.

கபில்தேவ்...

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு, சுமார் 6 புள்ளி 6 டன் எடையுடன், 51அடி உயரத்தில் கிளாஸிக் மால் டெவலப்மென்ட் கம்பெனி, கிரிக்கெட் மட்டை ஒன்றை வடிவமைத்துள்ளது. தற்போது பீனிக்ஸ் மாலில் வைக்கப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் மட்டை, உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கான விருது நேற்று முன்தினம் வழங்கப்பட்ட நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கலந்து கொண்டு விருதினை வழங்கினார்.

கையெழுத்து...

தொடர்ந்து கிரிக்கெட் மட்டையை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்த கபில்தேவ், அதில் தனது கையெழுத்தையும் பதிவுசெய்தார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தானை விட இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து