எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : முல்லைபெரியாறு, காவிரி, போன்றவற்றில் தமிழர்களுக்கு துரோகம் செய்தது தி.மு.க. என்றும், போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வரும் அம்மாவின் அரசை விமர்சிக்க தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் கிடையாது என்றும் உசிலம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் பா. நீதிபதி முன்னிலை வகித்தார், ஜமாபந்தி நிகழ்ச்சியில் 400 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியம்மாள், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஐயப்பன், பஞ்சம்மாள், ஒன்றிய செயலாளர்கள் பிச்சைராஜன், ராஜா, அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், நகர் செயலாளர் பூமாராஜா, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது,
வருவாய்த் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி ஒரு சம்பிரதாய நிகழ்ச்சியாக இருந்ததை ஒரு சாதனை நிகழ்ச்சியாக நாம் நடத்தி வருகிறோம். ஆனால் 3 மாதங்களுக்கு முன்பாகவே 32 மாவட்டங்களில் வறட்சியான காலங்களில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வண்ணம், முதல்வர் ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டார். அதில் வறட்சியான காலங்களில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வண்ணம் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக குக்கிராமங்களிலும் குடிநீர் பிரச்சனையை போக்கும் வண்ணம் மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் முதற்கட்டமாக ரூ. 262 கோடி ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் குடிநீர் திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது.
முன்பெல்லாம் 400 அடிகள் ஆழ்துளை குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது 1000 அடிக்கு மேல் ஆழ்துளை குழாய் அமைத்து மக்களுக்கு குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் விவசாய நிலங்களில் இருக்கும் கிணறுகளில் விவசாயிகளின் அனுமதி பெற்று அதில் இருக்கும் நீரை லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கவும், அதே போல் ஏரி, கண்மாய்களில் நீர் இருந்தாலும், குவாரிகளில் நீர் இருந்தாலும் அதை சுத்திகரித்து முழுவீச்சில் மக்களுக்கு வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் பருவமழை பெய்யாததால் ஏரி, கண்மாய்களில் நீர் வறண்டு இருந்தும் அதிலிருந்து மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வரும், துணை முதல்வரும் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து அமைச்சர்களையும் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இதே உசிலம்பட்டி பகுதியில் 58 கால்வாய் திட்ட பணியை முழுமைபடுத்தி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக அம்மா அரசு கொண்டு வர உள்ளது. உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு ரூ. 51 கோடியில் கூட்டு குடிநீர்த்திட்டம் செயல்பட உள்ளது. ஆனால் இந்த அம்மா அரசின் மீது வாய்கூசாமல் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தவறிய அரசு என்று ஸ்டாலின் உளறி வருகிறார். மக்களாகிய உங்கள் முன்பு ஸ்டாலினுக்கு கேள்வி கேட்கின்றேன். தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையான காவிரியையும், முல்லை பெரியார் பிரச்சனையில் தமிழகத்திற்கு துரோகம் செய்தது யார், காவிரி பிரச்சனையை இன்றைக்கு அம்மா வழியில் சென்று போராடி காவிரி மேலாண்மை ஆணையத்தை முதல்வரும், துணை முதல்வரும் அமைத்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி உள்ளனர். அதே போல் முல்லை பெரியாரை அம்மா மீட்டு தந்தார். அதன் மூலம் கோடி கணக்கான விவசாயிகளை காப்பாற்றியது அம்மாவின் அரசு. தென் மாவட்டத்தின் 50 லட்சம் மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்தது அம்மாவின் அரசாகும். இந்த அரசைப்பற்றி விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது.
மத்திய அமைச்சர் நிதின்கட்காரி நதிநீர் இணைக்கப்படும். அதன் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் பஞ்சமே வராது என்று கூறியுள்ளார். அதற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். தொலைநோக்கு திட்டமான கங்கை, கோதாவரி நதி இணைப்புத் திட்டத்தில் வைகை நதியையும் இணைக்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். இந்த நதிகள் இணைப்பின் மூலம் எப்பொழுதும் தமிழகத்திற்கு தண்ணீர் பஞ்சம் வராது. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்