முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை மத்திய அரசு வழங்குமா?

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட முடிவு செய்துள்ளதால், காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை மத்திய அரசு வழங்காது என்று அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி இழந்தது. சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து 2-வது தடவையாக பறிபோய் உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களில் 10 சதவீதம் இடங்கள் அதாவது 55 இடங்களைப் பெற்றால்தான் ஒரு கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும். காங்கிரஸ் கட்சிக்கு அந்த இடத்தைப் பெற தற்போது 3 எம்.பி.க்கள் குறைவாக உள்ளனர். இது ராகுலை கடும் விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. ஓரிரு எம்.பி.க்களை வைத்திருக்கும் சிறிய கட்சிகளை காங்கிரசுடன் இணைத்து எதிர்க்கட்சி தலைவர் ஆகி விடலாம் என்று ராகுல் சப்தமில்லாமல் முயற்சி மேற்கொண்டார். ஆனால் எந்த கட்சியும் காங்கிரசுடன் இணைய மறுத்து விட்டன. இதனால் மக்களவை காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்கவும் ராகுல் தயங்குகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி, பாராளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு மரியாதை உண்டு. எனவே எண்ணிக்கை பற்றி கவலைப்படாமல் எதிர்க்கட்சிகள் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். பிரதமர் மோடி பேச்சால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படலாம் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இதற்கான அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இந்த வி‌ஷயத்தில் அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பட்ட முறையில் சலுகை காட்டக் கூடாது என்று முடிவு எடுத்துள்ளனர். அதன்படி காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை மத்திய அரசு வழங்காது என்று பா.ஜ.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து