முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழக மண்டல ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட செயலாளர் வி.மருதராஜ் துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      திண்டுக்கல்
Image Unavailable

 திண்டுக்கல் - திண்டுக்கலில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மண்டல அளவிலான ஆண்கள் விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட கழக செயலாளர் மாநகராட்சி முதல் மேயர் மருதராஜ் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் வருடந்தோறும் ஆண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன் வரிசையில் இந்த வருடம் திண்டுக்கல் மாவட்ட தலைமை மின் பொறியாளர் அலுவலகத்தில் போட்டிகளின் துவக்க விழா நடைபெற்றது. திட்ட விளையாட்டு பொறுப்பாளர் முத்தையா அனைவரையும் வரவேற்றார். மேற்பார்வை பொறியாளர் பாஸ்கர் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட கழக செயலாளர், மாநகராட்சி முதல் மேயர் வி.மருதராஜ் துவக்கி வைத்து வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.தொடர்ந்து நான்கு நாட்கள்  இப்போட்டிகள் நடைபெறுகிறது. மாவட்ட தலைமை மின் பொறியாளர் அலுவலகம், மற்றும் மாவட்ட விளையாட்டு திடலில் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் கேரம், செஸ், வாலிபால், இறகுப் பந்து, கூடைப் பந்து, டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து, ஓட்டப் பந்தயம், என பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. துவக்க விழா நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் சி எஸ் ராஜ் மோகன்,முன்னாள் அபிராமி கூட்டுறவு சங்கத் தலைவர் பாரதிய முருகன், மாவட்ட கால்பந்தாட்ட கழக செயலர் சண்முகம், மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் காஜாமைதீன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், மாவட்ட பேரவை செயலாளர் வி.டி.ராஜன், விளையாட்டு ஒருகிணைப்பாளர் கலைச்செல்வன், மண்டல விளையாட்டு பொறுப்பாளர் தங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து