முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியிடம் போய் கேளுங்க! போராட்டம் நடத்தியவர்களிடம் கோபமாக பேசிய குமாரசாமி

புதன்கிழமை, 26 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

வேலைவாய்ப்பு கேட்டு போராட்டம் நடத்தியவர்களிடம், மோடியிடம் போய் கேளுங்கள் என கோபமாக பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.

கர்நாடக மாநிலம் கெரகுட்டா சென்ற முதல்வர் குமாரசாமி மற்றும் அமைச்சர்கள் சென்ற வாகனத்தை ராய்சூர் பகுதியில் எர்மாரஸ் அனல்மின் நிலை பணியாளர்கள் மறியல் செய்து போராட்டம் நடத்தினர். நிரந்தர பணி வழங்கக்கோரி இவர்கள் சாலையின் குறுக்கே அமர்ந்து போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், முதல்வரின் வாகனத்திற்கு வழிவிட அவர்கள் மறுத்து விட்டனர்.

வாகனத்திற்குள் வெகுநேரமாக அமர்ந்திருந்த முதல்வர் குமாரசாமி, பொறுமை இழந்து கோபமடைந்தார். வாகனத்தின் கண்ணாடியை கதவை இறக்கி விட்டு தன்னிடம் கேள்வி கேட்ட போராட்டக்காரர்களிடம் பேசிய குமாரசாமி, எனக்கா ஓட்டு போட்டீர்கள்? எனக்கு ஓட்டு போடாததால் வேலை கிடையாது.  மோடிக்கு தானே ஓட்டு போட்டீர்கள். மோடியிடமே போய் வேலை வேண்டும் என கேளுங்கள். என்னிடம் கேட்காதீர்கள். வழி விடுங்கள் என கோபமாக பேசினார். முதல்வரின் இந்த கோபமான பேச்சு குறித்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து