முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரிய அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு: இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் ஜி -20 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டுக்கு இடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். அந்த வகையில், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் - பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் பரஸ்பரம் இருநாடுகளின் நலன்கள் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து