எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- தமிழக மக்கள் அம்மாவின் அரசுக்கு ஆதரவாக உள்ளதால் அம்மா அரசின் ஆயுள் குறித்த ஸ்டாலினின் பேச்சு வெத்து வேட்டு என்று திருமங்கலம் ஒன்றியத்தில் நடைபெற்ற அ.தி.மு.க பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்,கழக அம்மா பேரவைச் செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் அதிரடியாக பேசினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள மறவன்குளம்,உச்சப்பட்டி,கப்பலூர்,மேலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க பூத்கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டங்கள் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த கூட்டங்களுக்கு திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன் தலைமை வகித்தார்.மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன் ஆகியோர் வரவேற்று பேசினார்கள். ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பூத்கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த ஆலொசனை கூட்டங்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல்களில் அ.தி.மு.க பூத்கமிட்டி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய யுக்திகள் குறித்தும்,எதிர்கட்சியினரின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து அ.தி.மு.க.விற்கு 100சதவீத வெற்றியை பெற்றுத் தந்திடுவது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து மறவன்குளம் கிராமத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்ததாவது: மேடைகளில் பொய்யை மட்டுமே ஸ்டாலின் பேசி வருகிறார்.அவர் சொல்லிடும் பொய் உண்மையாக ஆவதற்கு காலம் எந்தவிதத்திலும் கைகொடுக்காது.தேர்லுக்கு முன்பு அப்படி நடந்துவிடும் இப்படி நடந்துவிடும் என்று.அவர் சொன்னபடி அப்படியும் நடக்கவில்லை இப்படியும் நடக்கவில்லை.அம்மாவுடைய அரசு தான் இன்றும் தொடர்கிறது. தேர்தலுக்கு பின்பு ஐந்து நாட்கள் அமைதியாக இருந்தார்கள்.தற்போது மீண்டும் பொய் பிரச்சாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசு என்பது ஐந்து ஆண்டுகாலம்.அந்த ஐந்து ஆண்டுகாலத்தில் அம்மாவுடைய அரசு மக்களுக்கு முழுமையான சேவை செய்திடும்.ஆனால் அதற்கு முனபாகவே பல்வேறு இடைத்தரகர்களை நியமித்து ஆள்பிடிக்கிற வேலைகளை செய்து கொண்டு மேடையிலே பரிசுத்தமானவர் போல் ஸ்டாலின் பேசுகிறார்.அம்மாவுடைய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் முதல்வர் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.ஒவ்வொரு நாளும் முதல்வர் எடப்பாடியார் மீதான நம்பிக்கை மக்களிடம் பெருகிக் கொண்டே இருக்கிறது.இந்த அச்சத்தினால் தான் அம்மாவுடைய அரசின் ஆயளை பற்றி அடிக்கடி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார்.அம்மாவுடைய உண்மை விசுவாசிகள் யாரும் புரட்சித்தலைவர் தீயசக்தி என்று அடையாளம் காட்டப்பட்ட தி.மு.க.விற்கு போக மாட்டார்கள்.எனவே அம்மா அரசின் ஆயுள் குறித்த ஸ்டாலினின் பேச்சு வெத்து வேட்டு.இந்த பேச்சிற்கு பதிலாக தனது செயலால் முதல்வர் பதிலடி தந்து கொண்டிருக்கிறார்.தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை பொருத்தமட்டில் பவமழை பொய்த்ததால் வந்த விளைவு.இதனால் தான் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதுடன் பல்வேறு கட்ட வரலாற்று சிறப்புமிக்க குடிமராமத்து திட்டங்களை அம்மாவின் அரசுசெயல்படுத்தி வருகிறது.
அத்துடன் முந்தைய தி.மு.க ஆட்சியின் போது கொண்டு வரத்தவறிய நல்லபல திட்டங்களையும் அம்மாவின் அரசு நிறைவேற்றி வருகிறது.அம்மா இருந்தபோது இந்த 41சதவீத வாக்கு தற்போது 38.2சதவீதமாக உள்ளது.இதற்கு காரணம் துரோகி டிடிவியின் பொய் பிரச்சாரம் மற்றும் எதிர்கட்சியினரின் கோயபல்ஸ் பிரச்சாரம் அத்துடன் புதுகட்சிகளின் வரவு தான்.இந்த மும்முனை தாக்குதலை சமாளித்து இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை அம்மா அரசு பெற்றுள்ளது.தண்ணீர் பிரச்சனையை முன்வைத்து எதிர்கட்சியினர் பல்வேறு பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.இதனை முறியடித்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் விவசாய கிணறுகள்,கூட்டுகுடிநீர் திட்டங்கள்,கடல்நீரை குடிநீராக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததன் காரணமாகத்தான் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம் முழமையடைந்தவுடன் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் பெருமளவு தீர்ந்திடும்.பல்வேறு தடைகளை தாண்டி மக்களின் பேராதரவுடன் அம்மாவின் அரசு செயல்பட்டு வருகிறது.20,22 என்று ஸ்டாலின் கணக்கு போட்டு வருகிறார்.அவரது கணக்கு தப்பு கணக்கு ஒருகாலும் அது கைகூடாது.தமிழக அரசு மேற்கொண்டு வரும் மாற்று நடவடிக்கைகளின் மேல் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தி.மு.க ஆட்சியின் போது இருந்த சட்டம்-ஒழுங்கு பாதிப்பு,நில அபகரிப்பு,மின்தட்டுப்பாடு போன்றவை அம்மா ஆட்சியில் கிடையாது.இதனால் தான் மக்கள் அம்மா அரசுக்கு பாதுகாவலாக உள்ளனர்.எனவே தான் புரட்சித்தலைவி அம்மா அறிவித்தபடி மக்கள் ஆதரவுடன் அம்மாவுடைய அரசு இன்னும் நூறு ஆண்டுகள் அன்னைத் தமிழகத்தை ஆள்வது நிச்சயம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டங்களில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம், போத்திராஜா, திருப்பதி,ஒன்றிய செயலாளர்கள் கள்ளிக்குடி மகாலிங்கம்,கல்லுப்பட்டி ரமாசாமி,பேரூர் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணி,திருமங்கலம் ஒன்றிய அவை தலைவர் அன்னக்கொடி,துணை செயலாளர் சுகுமார்,இணைச் செயலாளர் சுமதிசாமிநாதன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம்,பழனிச்சாமி,ஆறுமுகம்,சிவஜோதி தர்மர்,கட்சி வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,சதீஷ்,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன், சாமிநாதன்,நாகையாசாமி,எஸ்.பி.எஸ்.ராஜா,ஜெய.சி.செல்வகுமார்,சின்னன்,சாமிநாதன்,அழகர்,கல்லுப்பட்டி துணைச் செயலாளர் மீனாலட்சுமி,சின்னன்,பரமசிவம்,லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்;டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,