எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஜினாமா முடிவை கைவிடுங்கள் என்று ராகுலிடம் முதல் மந்திரிகள் வலியுறுத்தியும் அவர்களது சமரச பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பிடிக்க முடியாத அளவுக்கு படுதோல்வியைத் தழுவியதால் விரக்தி அடைந்த ராகுல், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
டெல்லியில் கடந்த மே மாதம் 25-ந்தேதி நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் ராகுலின் ராஜினாமாவை ஏற்க மறுத்தனர்.
அதோடு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை முழுமையாக மாற்றி அமைக்கும் அதிகாரத்தையும் ராகுலுக்கு வழங்குவதாக காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் ராகுல் அதை ஏற்க வில்லை. அமேதியில் மோசமான தோல்வியைத் தழுவியதால், அவர் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் உறுதியாக இருந்தார்.
சோனியா, பிரியங்கா மற்றும் மூத்த தலைவர்கள் வலியுறுத்திய பிறகும் ராகுல் ராஜினாமா முடிவில் பிடிவாதமாக உள்ளார். இதற்கிடையே தோல்விக்கு பொறுப்பேற்று தன்னைப் போன்று மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் யாரும் பதவியை ராஜினாமா செய்ய வில்லையே என்ற ஆதங்கமும் ராகுலுக்கு ஏற்பட்டது. இதை அறிந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சுமார் 250 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
அதன்பிறகும் ராகுல் மனநிலையில் மாற்றம் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து ராகுலை நேற்று காங்கிரஸ் முதல்-மந்திரிகள் அசோக் கெலாட், கமல்நாத், கேப்டன் அம்ரீந்தர்சிங், நாராயணசாமி ஆகிய 4 பேரும் சந்தித்துப் பேசினார்கள். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, “தற்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவது நல்லது அல்ல. எனவே ராஜினாமா முடிவை கைவிடுங்கள்” என்று ராகுலிடம் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
ஆனால் அதன் பிறகும் ராகுல் மனம் மாறவில்லை. “புதிய தலைவர் ஒருவரை தேர்வு செய்து கொள்ளுங்கள்” என்று பிடி கொடுக்காமலே ராகுல் கூறினார். இதைத் தொடர்ந்து “நீங்கள் முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால், நாங்களும் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிக் கொள்கிறோம்” என்று அசோக் கெலாட்டும், கமல் நாத்தும் தெரிவித்தனர்.
ஆனால் ராகுல் அதை ஏற்கவில்லை. அதே சமயத்தில் தனது ராஜினாமா முடிவில் மிகவும் உறுதியாக இருந்தார்.
இதைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டது. மூன்று மூத்த தலைவர்களின் பெயர்கள் தலைவர் பதவிக்கு தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டன. இறுதியில் சுசீல்குமார் ஷிண்டேயை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யலாம் என்ற கருத்து உருவானதாக கூறப்படுகிறது.
இதை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒத்துக் கொள்ளவும் இல்லை. மறுக்கவும் இல்லை. எனவே சுசீல்குமார் ஷிண்டே புதிய தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இவர் காங்கிரசில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு தடவை ஜனாதிபதி தேர்தலுக்கு நிறுத்தப்பட்டார். தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த அவரை காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக்குவதன் மூலம் அடிமட்ட மக்களின் அனுதாபத்தையும், ஆதரவையும் பெற முடியும் என்று காங்கிரசில் ஒரு சாரார் கூறுகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.