முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள்: மைக்கேல் வாகன் கணிப்பு பலிக்குமா?

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டத்திற்குப்பின் மைக்கேல் வாகன் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதை கணித்துள்ளார்.

இங்கிலாந்து வெற்றி...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து இடையிலான லீக் ஆட்டம் முக்கியமானதாக கருதப்பட்டது. இந்தியா வெற்றி பெற்றால் இங்கிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும் என்ற நிலைமை இருந்தது. ஆனால் முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் மற்றும் வங்காள தேச அணிகளின் அரையிறுதி வாய்ப்பு கடினமாகியுள்ளது. இந்தியா - இங்கிலாந்து போட்டிக்குப் பிறகு இந்த நான்கு அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும். மேலும், அரையிறுதியில் இந்த அணிகள்தான் மோதும் என மைக்கேல் வாகன் கணித்துள்ளார்.

4 அணிகள் முன்னேறும்...

இதுகுறித்து மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஆட்டத்தின் முடிவு அரையிறுதிக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்று எனக்குத் தோன்றுகிறது. மான்செஸ்டரில் நடக்கும் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா (1) - நியூசிலாந்து (4) அணிகள் மோதும். பர்மிங்காமில் நடக்கும் 2-வது அரையிறுதியில் இந்தியா (3) - இங்கிலாந்து (3) அணிகள் மோதும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இது நடக்குமா?

மைக்கேல் வாகன் கணிப்பின்படி நேற்றைய போட்டியில் இந்தியா வங்காள தேசத்தை வீழ்த்த வேண்டும். வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்க வேண்டும். இங்கிலாந்து நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும். இது நடக்குமா? என்பது போகபோகத்தான் தெரியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து