எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மருத்துவப்படிப்பில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு கூடுதலாக வழங்கப்படும் இடங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சட்டநிபுணர்களின் கருத்துக்களை கேட்டு முடிவெடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் பொருளாதார அடிப்படையில் மத்திய அரசு அறிவித்த இடஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்கொண்டுவந்தார். இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான சட்ட மசோதாவை நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று தமிழ்நாடு சட்டம் 45/1994 உருவாக்கி சட்ட பாதுகாப்பு வழங்கியுள்ளார்.
இதற்காக ஜெயலலிதா ‘‘சமூக நீதி காத்த வீராங்கனை’’ என்று அனைவராலும் பாராட்டப்பட்டார். தற்போது அரசு தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறையை பாதுகாக்க தொடர்ந்து அனைத்து நடவடிக்கையையும் எடுத்துவருகிறது.மேலும், தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 350 மருத்துவக் கல்வி இடங்கள் கூடுதலாக பெறப்பட்டுள்ளது.
தற்போது மத்திய அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு முறையை நடைமுறைபடுத்த அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. இதில் தமிழகம், கர்நாடகா மாநிலம் தவிர மீதமுள்ள மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. அக்கடிதத்தில் மருத்துவக் கல்வியினைபொறுத்தவரை 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் பட்சத்தில் 25 விழுக்காடு கூடுதல் மருத்துவக் கல்வி இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் இதற்காக எந்தவொரு கூடுதல் வசதிகளும் கல்லூரியில் ஏற்படுத்த அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசின் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தும் பட்சத்தில் கூடுதலாக 25 விழுக்காடு புதிய மருத்துவப் படிப்பிற்கான இடங்களை அதாவது 1000 1250 மருத்துவ இடங்கள் தமிழகத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும். இதன் காரணமாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 விழுக்காடு ஒதுக்கீட்டை தவிர மீதமுள்ள இடங்கள் தமிழகத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீடு விதிகளின் அடிப்படையிலேயே நிரப்பப்படும்.
இதன் காரணமாக ஏற்கனவே பின்பற்றப்படும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு முறையில் பயனடைந்து வருபவர்களும் இந்த ஒதுக்கீடு முறையில் கூடுதலாக பயனடைய ஏதுவாகும். இதன் மூலம் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது. அதில் எந்தவித சமரசமும் செய்யப்படமாட்டாது. இவ்வாறு பேசினார்.
இதைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர் பொன்முடி பேசுகையில் 10 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றினால் மருத்துவ மாணவர் சேர்க்கையிடங்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று மத்திய அரசு நிபந்தனை விதிக்கிறது என்றால் அது மாநிலஅரசு உரிமையை பறிக்கும் நடவடிக்கை என்றும் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதிக்கும். எந்த நிபந்தனைகளை இல்லாமல் கூடுதல் இடங்களை பெறவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நாங்கள் எந்த நிபந்தனைகளையும் ஏற்கவில்லை. ஏற்கனவே கூடுதல் இடங்கள் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வந்திருக்கின்றன. அதற்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. கூடுதல் இடங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சட்ட நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு நடத்தி, அவர்களின் கருத்துக்களை கேட்டு நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார். மேலும் இந்த தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. அதுகுறித்து தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்துள்ளது. கம்யூனிஸ்ட்இயக்கங்களும் அதை வரவேற்றன. அதை பற்றி காங்கிரசார் என்னசொல்கிறார்கள் என்று தெரிவிக்கவேண்டும் என்று கேள்விஎழுப்பினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.