முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்ருட்டி தொகுதியில் அரசு, மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் அமைத்துதர வேண்டும் - சட்டசபையில் சத்யா பன்னீர்செல்வம் கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி,பொறியியல் கல்லூரிகள் அமைத்துத்தர வேண்டும் என்று அத்தொகுதி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் சத்யா பன்னீர் செல்வம் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைத்து தரவேண்டும் என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணமாகும். அதை நிறைவேற்றும் வகையில் பண்ருட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைத்துதர வேண்டும். அதேபோல் அண்ணா பல்கலைக் கழகத்தின் மூலம் அரசு பொறியியல் கல்லூரியும் பண்ருட்டி வட்டாட்சியர் வளாகத்தில் அரசுகலை அறிவியல் கல்லூரி அமைத்து தரவேண்டும். மாளிகை மேடுபகுதியில் புதிய துணைமின்நிலையமும் உருவாக்கித்தர வேண்டும். பண்ருட்டி தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்களை தூர்வாரித்த ரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து