முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.ஐ.பி. தரிசன முறையில் விரைவில் மாற்றம் - திருப்பதி அறங்காவலர் தலைவர் தகவல்

புதன்கிழமை, 3 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

திருமலை : திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன முறையில் மாற்றம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது:-

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஏராளமான சாதாரண பக்தர்களும், வி.ஐ.பி. பக்தர்களும் திருமலைக்கு வருகின்றனர். வி.ஐ.பி. தரிசனத்தில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், எல்-1 மற்றும் எல்-2 என பல பிரிவுகள் உள்ளன. அதில் தினமும் காலை 7.30 மணியளவில் இருந்து 8.30 மணிவரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதில் சில பிரச்சினைகள் இருப்பதாக வி.ஐ.பி. பக்தர்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன. எனவே வி.ஐ.பி. தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதை ஒரே பிரிவாக அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வி.ஐ.பி. தரிசன பிரிவில் ஏற்றத்தாழ்வு இல்லாமல், அனைத்துப் பக்தர்களும் சமமாக கருதப்படுவார்கள். இதுபற்றி வருகிற அறங்காவலர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து