முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல் மர்ம நபர் குறித்து போலீஸ் விசாரணை

புதன்கிழமை, 3 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

விதிஷா : பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்க அமித்ஷாவின் தேர்தல் வியூகம் தக்க பலன் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அமித்ஷா காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் அமித் ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் கன்ஜிபசோடா தொகுதி பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. லீனாஜெயினுக்கு மர்ம நபரிடம் இருந்து மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் மத்திய அமைச்சர்அமித்ஷா, கன்ஜிபசோடா நகருக்கு வரும் போது வெடி குண்டு மூலம் கொல்லப்படுவார் என்றும் இதே போல் நீங்களும் (லீனா ஜெயின்) கொல்லப்படுவீர்கள் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் பஸ்நிலையம், ரயில் நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது குறித்து லீனா ஜெயின் எம்.எல்.ஏ. போலீசில் புகார் செய்தார். இதையடுத்து பஸ், ரெயில் நிலையம், அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களும் சோதனையில் ஈடுபட்டனர். மிரட்டல் கடிதத்தில் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அந்த கடிதத்தை எழுதிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து