முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பராமரிப்பு பணியால் மின்தடை ஏற்பட்டால் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படும் - அமைச்சர் தங்கமணி தகவல்

புதன்கிழமை, 3 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்பட்டால் அது குறித்து பொதுமக்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்று சட்டசபையில் மின்துறை  அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில நேற்று கேள்வி நேரத்தின் போது தி.மு.க. உறுப்பினர் கே.பி.பி.சாமி திருவொற்றியூர் பகுதியில் ஏற்பட்ட மின்தடை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி,

திருவொற்றியூர் பகுதியில் மின் தடை உள்ளதாக உறுப்பினர் கே.பி.பி.சாமி தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் இன்சுலேட்டர்கள் வெடிப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டது. உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளது.

அதே போல இன்று (நேற்று) காலை முதல் மின்சாரம் இல்லை என்று உறுப்பினர் தெரிவித்தார். அங்கு பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டிருக்கலாம். எங்கெங்கு பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளதோ அங்கு நுகர்வோருக்கு செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படும். திருவொற்றியூரிலும் அதுபோன்று எஸ்.எம்.எஸ்.அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து