முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாடானை வட்டாரத்தில் குடிமராமத்து பணிகள் கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு

புதன்கிழமை, 3 ஜூலை 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்படவுள்ள கண்மாய் புனரமைப்பு பணிகள் குறித்து கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் நேரடியாக சென்று ஆய்வு செய்ததோடு கிராமப் பொதுமக்களிடம் குடிமராமத்து திட்டப் பணிகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
 தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.   குறிப்பாக, கீழ்வைகை வடிநில கோட்டம், பரமக்குடியின் கட்டுப்பாட்டில் பரமக்குடி, ராமநாதபுரம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் முதுகுளத்தூர் வட்டங்களில் உள்ள 41 கண்மாய்களிலும், குண்டாறு வடிநில கோட்டம், மதுரையின் கட்டுப்பாட்டில் முதுகுளத்தூர், கடலாடி மற்றும் கமுதி வட்டங்களில் உள்ள 28 கண்மாய்களிலும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதனடிப்படையில், மாவட்ட கலெக்டர் திருவாடானை வட்டத்திற்குட்பட்ட குருமிளாங்குடி, வட்டாணம் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்திற்குட்பட்ட ஏ.ஆர்.மங்கலம் கிராமம் ஆகிய கிராமங்களுக்கு நேரிடையாகச் சென்று குடிமராமத்து திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள கண்மாய்களை ஆய்வு செய்தார். அப்போது அவர் கிராம மக்களிடையே பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 69 கண்மாய்களில் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கண்மாய்களின் கரைகளை பலப்படுத்துதல், மடைகள், கலுங்குகளை சீரமைத்தல் மற்றும் மறுகட்டுமானம் செய்தல், வரத்துக் கால்வாய்களை புனரமைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
  இந்த குடிமராமத்து திட்டப்பணிகளுக்கு அரசின் பங்களிப்பாக 90 சதவீத தொகையும், அப்பகுதி விவசாய குழுக்களின் பங்களிப்பாக 10 சதவீத தொகையுடன் இப்பணிகள் பதிவு பெற்ற விவசாய சங்கங்கள் மூலம் நியமன முறையில் செயல்படுத்தப்படும். இவ்வாறு மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகளை குறிப்பிட்ட கால அளவிற்குள் தரமான முறையில் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படும். மேலும், பொதுமக்கள் சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்திடும் விதமாக ஊரகப் பகுதிகளில் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்திட வேண்டும்.  அதேபோல, மழைநீரை சேகரித்திடும் விதமாக அதிக அளவில் பண்ணைக் குட்டைகள் அமைத்திடவும் தங்களது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்திடவும் முன்வர வேண்டும்.இவ்வாறு பேசினார். இந்த நிகழ்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு வைகை வடிநில கோட்டம்) எஸ்.வெங்கிடகிருஷ்ணன் உட்பட அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து