முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்தி முடிவு - பிரியங்கா கருத்து

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, ராஜினாமா செய்தார். இது குறித்து பிரியங்கா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று பல்வேறு மாநில கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். இதனையடுத்து ராகுல் காந்தியும் இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியானது. அதன் பின்னர் நடத்தப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ராகுல் மீண்டும் தலைவராக தொடர முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ராகுல் காந்தி தனது ராஜினாமா குறித்து கூறுகையில், நான் ஏற்கனவே கட்சி தலைமையிடம் எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டேன். நான் காங்கிரஸ் தலைவர் இல்லை. காங்கிரஸ் காரிய கமிட்டியை உடனடியாக கூட்டி புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள் என கூறியிருந்தார். இந்த செய்தி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில், ராகுல் காந்தி எடுத்த இந்த முடிவை தைரியமுள்ள சிலரால் மட்டுமே செய்ய முடியும். அவரது இந்த முடிவிற்கு எனது ஆழ்ந்த மரியாதையை செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து