முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் இன்று முதல் பலத்த மழை பெய்யும்: வானிலை மையம் - 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: மாநில அரசு

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரளாவில் இன்று முதல் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளதால் 4 மாவட்டங்களுக்கு மழை தொடர்பான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜூன் 8-ம் தேதி தொடங்கியது. அதன் பிறகு மாநிலம் முழுவதும் பரவலாக பெய்த மழை, வாயு புயல் உருவானதும் தீவிரம் குறைந்து சாரல் மழையாக மாறியது. கேரளாவில் கண்ணாமூச்சி காட்டிய தென்மேற்கு பருவ மழையால் மாநில அணைகளின் நீர் இருப்பு குறைந்தது. இதனால் மாநில மின் உற்பத்தியும் குறைந்தது. மின்சாரத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவானது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று முதல் கேரளாவில் மீண்டும் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடையும். மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மாநில அரசு உரிய முன் எச்சரிக்கைகளை மேற்கொள்ளவும் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையை தொடர்ந்து மாநில அரசு மழை முன் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் பத்தினம் திட்டா, கோட்டயம், இடுக்கி, கண்ணூர் மாவட்டங்களுக்கு மழை தொடர்பான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது போல எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் போதிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும், மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து