முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்தார்.

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அக்கட்சியில் பலர் பதவி விலகுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா விலகி உள்ளார். மேலும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களான தீபக் பபாரியா மற்றும் விவேக் தன்ஹா ஆகியோரும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகி உள்ளனர். இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மட்டுமே அவர்களின் பதவி விலகலை ஏற்றுக் கொள்ள முடியும். இதனால் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை பதவி விலகுவதாக அறிவித்திருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் அதே பதவியில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து