முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019      ஆன்மிகம்
Image Unavailable

சிதம்பரம் : கடலூரில் ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. 

பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குவது கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில். உலக புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இக்கோவிலில் ஆனந்த நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் ஆனி, மார்கழி மாதம் நடைபெறும் மகாஅபிஷேகம் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.

இதனிடையே ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த 5 தேர்களையும் திரளாக கூடியிருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து