முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழையால் உயரும் அணைகளின் நீர்மட்டம்: காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசு ஒப்புதல் - மேலாண்மை ஆணையத்துக்கும் குமாரசாமி கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடக மற்றும் தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரியில் நீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் இது குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அதிகாரிகள் வலியுறுத்த முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், மாண்டியாவில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான நீரை தமிழகத்திற்கு திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. காவிரியில் ஜூன் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய 9.19 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறக்குமாறு கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தற்போது தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் போதிய மழை இல்லாத காரணத்தினால் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்திருப்பதால் மக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையே காவிரியில் இருந்து கர்நாடகம் தண்ணீரை திறந்து விட்டால் பற்றாக்குறை பிரச்னை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கர்நாடகா அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காணப்படுவதால் தண்ணீரை திறக்கும் முடிவுக்கு கர்நாடகம் அரசு முன்வந்துள்ளது. இதற்கு முதல்வர் குமாரசாமியும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து