முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரிசு பொருள் தொடர்பான வழக்கில் அமைச்சர் செங்கோட்டையனை விடுவித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

பரிசுப் பொருள் தொடர்பான வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையனை சுப்ரீம் கோர்ட் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

 கடந்த 1992-ம் ஆண்டு முதல்வராக இருந்த போது வந்த பரிசு பொருட்கள் தொடர்பாக ஜெயலலிதா மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது குறித்து ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. இந்தநிலையில் ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு ஆகியோர் இறந்து விட்டதால் அவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதே நேரம் செங்கோட்டையன் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை சி.பி.ஐ. காலதாமதமாக கையாண்டதால் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே 23 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பம் இல்லை என தெரிவித்த நீதிபதிகள் வழக்கில் இருந்து செங்கோட்டையனை விடுவித்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து