முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கையில் குறிப்பில்லாமல் துறை பற்றிய பேச்சு: அமைச்சர் சண்முகத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : குறிப்புகள் ஏதும் இல்லாமல் பதிலுரை வழங்கிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தை அமைச்சர்கள், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பெரிதும் பாராட்டினார்கள்.

சட்டப்பேரவையில் சட்டம், நீதி நிர்வாகம் மற்றும் சிறைத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களின் விவாதத்துக்கு பின் பிற்பகல் சுமார் 1.50 மணிக்கு பதிலுரை வழங்க துவங்கிய அமைச்சர் சண்முகம், 2.25 மணிக்கு தன்னுடைய உரையை முடித்தார். வழக்கமாக அமைச்சர்கள் பதிலுரை வழங்கும் போது, தங்களுடைய துறை சார்ந்த முக்கிய குறிப்புகளை கையில் வைத்துக் கொண்டோ அல்லது, அதை பார்த்தோ படிப்பார்கள். சில அமைச்சர்கள் முழு பதிலுரையையும் பார்த்தே படிப்பார்கள். ஆனால் அமைச்சர் சண்முகம், கையில் ஏதும் குறிப்பில்லாமல் சட்டத்துறை, நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள் உள்ளிட்ட துறைகளில் அரசு இதுவரை என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றியுள்ளது, செயல்படுத்தவுள்ளது என்பது குறித்த தகவல்களை புள்ளி விவரத்தோடு பேசியதை பேரவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் ரசித்தனர். அமைச்சர் சண்முகம் பேசி முடித்ததும், தி.மு.க. உறுப்பினர்கள் சிலர் அமைச்சரை அழைத்து வாழ்த்து தெரிவித்தனர். அதே போல் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களும் சண்முகத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து