எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் வரும் 19-ம் தேதியன்று நடக்கும் சுற்றுச்சூழல் நிபுணர் குழு கூட்டத்தில் விவாதம் நடத்தப்படவே கூடாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், மேகதாது அணை தொடர்பாக எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி வலியுறுத்தி உள்ளார்.
நீண்டகால பிரச்சினை
தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையில் காவிரி பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த பிரச்சினையில் பல சட்டப் போராட்டங்களை நடத்தி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடச் செய்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரது வழியில் செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மத்திய அரசிடம் போராடி காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடகம் ஒரு புது பிரச்சினையை எழுப்பி வருகிறது. அதாவது காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணையை கட்ட கர்நாடகம் பகிரீத பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும் கர்நாடக அரசு அந்த அணையை கட்டுவதில் மிக தீவிரமாக உள்ளது.
முதல்வர் எடப்பாடி கடிதம்
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேகதாது அணை தொடர்பாக மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோருக்கு தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதங்களில் அவர் கூறியிருப்பதாவது,
மேகதாது அணை திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற கர்நாடகம் முயற்சி செய்து வருகிறது. ஆனால் அதற்கு அனுமதி தரக்கூடாது. இந்த விஷயத்தில் பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும் என்று கோரி கடந்த 24.6.2019 அன்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். ஆனால் இப்போது வரும் 19-ம் தேதியன்று டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இது பற்றி விவாதிக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. கமிட்டியின் இந்த செயல் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் மீறுகின்ற ஒரு செயலாகும். தமிழக அரசு கர்நாடகத்தில் மேகதாது அணை கட்ட தனது கடுமையான ஆட்சேபனைகளை எழுப்பி வந்துள்ளது. காரணம், இது நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கும் எதிரானது.
அனுமதி பெறவில்லை
இது தொடர்பாக கர்நாடக அரசு தமிழகத்திடம் இருந்து எந்த முன் அனுமதியையும் பெறவில்லை. காவிரி படுகையில் மேகதாது அணை கட்டவோ, அல்லது எந்த திட்டத்துக்கோ தமிழக அரசிடம் இருந்து கர்நாடகம் அனுமதி பெறவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக தமிழக அரசு வழக்கும் தொடர்ந்துள்ளது. மேலும் தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக நிபுணர் ஆய்வுக் குழு வரும் 19-ம் தேதி நடத்தவுள்ள கூட்டத்தில் விவாதிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே அவ்வாறு எந்தவித விவாதமும் நடத்தப்படக் கூடாது. அது தொடர்பாக நிபுணர் ஆய்வுக் குழுவுக்கு சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்திலும் இது போன்ற செயல்களில் நிபுணர் ஆய்வுக்குழு ஈடுபடக் கூடாது. இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.
மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்துக்கும் இதே போல் ஒரு கடிதத்தை எழுதியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிலும் தனது மேற்கண்ட கருத்துக்களை பதிவு செய்துள்ளார். மேலும் கர்நாடக அரசு காவிரி படுகையில் மேகதாது அணை கட்ட எந்தவித அனுமதியையும் வழங்கக் கூடாது என்று ஜலசக்தி துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவது காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கும் முற்றிலும் எதிரானது என்பதையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.