முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சி வரும்.. ஆனால் வராது - அமைச்சர் பேச்சால் சபையில் சிரிப்பலை

புதன்கிழமை, 10 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தி.மு.க. ஆட்சி வரும். ஆனால் வராது என திரைப்பட காமெடி பாணியில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
சமூக நலத்துறை மானிய கோரிக்கையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் சேகர் பாபு, விரைவில் வரவுள்ள தி.மு.க. ஆட்சி தமிழகத்தின் பிரச்சினைகளை சரி செய்யும் என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார்,

நடிகர் வடிவேல் பட காமெடி வசனமான வரும்... ஆனால் வராது என கூறியதையடுத்து அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. அப்போது பேசிய தி.மு.க. உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, சமூக நலத்துறை அமைச்சர் படித்தவர் தானே என்றும், அவர் துறை சார்ந்த கேள்விக்கு ஏன் மற்ற அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் சொல்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். பெண் உரிமை பேசும் நிலையில், பெண் அமைச்சர் பதிலளிக்க அனுமதிக்க மறுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உறுப்பினர்களுக்கு பதிலளிப்பது அமைச்சர்களின் கூட்டு பொறுப்பு என்றார். கேள்விக்கு தொடர்புடைய அனைத்து அமைச்சர்களுக்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளதால் பதிலளிப்பதாகத் தெரிவித்த அவர், இது கடந்த தி.மு.க. ஆட்சியிலும் நடந்துள்ளதாகவும், தேவைப்பட்டால் அவைக்குறிப்பை பார்க்கலாம் என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து