எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் அளித்த ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டது.
கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் -ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்தே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருந்து வந்தனர். அவர்களை கட்சித் தலைமை சமாதானம் செய்து வந்தது. இருப்பினும் ஆட்சியை கவிழ்ப்பதில் அவர்கள் தீவிரமாக இருந்தனர். ஆளும் கூட்டணி கட்சிகளில் இருந்து 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கூட்டணி அரசு கடும் நெருக்கடியில் உள்ளது. ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அங்கீகரித்தால், இந்த கூட்டணி அரசு தானாகவே கவிழ்ந்து விடும்.
இதனிடையே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ராஜினாமா விஷயத்தில் சபாநாயகரை முடிவு எடுக்கும்படி அறிவுறுத்தியது. அத்துடன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சபாநாயகரை சந்திக்கும்படி அறிவுறுத்தியது. அதன்படி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் சபாநாயகரை சந்தித்தனர். ஆனால், சபாநாயகரோ ராஜினாமா கடிதங்களை உடனடியாக ஏற்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டார். முழுமையாக விசாரணை நடத்தி அந்த விசாரணையின் அடிப்படையில்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிராக சபாநாயகர் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தன்னையும் இணைக்கும்படி கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அனில் சாக்கோ ஜோசப் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்குடன் சேர்த்து விசாரிப்பதாக கூறினர். இதே போல் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனுக்களை விசாரிக்கக் கூடாது என கூறியுள்ளனர்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால் தார்மீக அடிப்படையில் இதுபோன்ற வழக்குகளை விசாரிக்காமல் இருக்கலாம். மக்களின் கருத்தை கேட்காமல் ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்களை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற மனுக்களை விசாரிக்க கூடாது என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த பரப்பான சூழ்நிலையில், கர்நாடக விவகாரம் தொடர்பான இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கியும், சபாநாயகர் தரப்பில் அபிஷேக் சிங்வியும் வாதாடினர். இரு தரப்பினருக்குமிடையே காரசாரமான வாதம் நடைபெற்றது. அரசியலமைப்பு சட்ட விதிகள் பற்றி விளக்கி கூறிய அபிஷேக் சிங்வி, அரசியலமைப்பு பதவியை சபாநாயகர் வகிப்பதாக கூறினார். சபாநாயகர் சட்டமன்றத்தின் மிக மூத்த உறுப்பினர், அவருக்கு அரசியலமைப்பு சட்டம் தெரியும். அவரை இழிவுபடுத்தும் வகையில் இதுபோன்று வழக்கு தொடரக் கூடாது என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்க்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொள்வதற்கு சபாநாயகருக்கு தைரியம் இல்லை என அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் அளித்த ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டனர். ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கூடாது. ராஜினாமாவை ஏற்பது பற்றியோ, நிராகரிப்பது பற்றியோ எந்த முடிவும் எடுக்கக் கூடாது. தற்போதைய நிலையை நீடிக்க வேண்டும். இது அரசியல் சாசன விவகாரம் என்பதால் விரிவான விசாரணை நடத்த வேண்டி உள்ளது என நீதிபதிகள் கூறினர். இந்த வழக்கின் விசாரணையை 16-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்0 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
பறவைக் காய்ச்சல், அம்மை நோய் பாதிப்புகள்: அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு
23 Apr 2024சென்னை, கோடை காலத்தில் ஏற்படும் பறவைக் காய்ச்சல், அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
சென்னை ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்ம மரணம்
23 Apr 2024சென்னை, பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தடையில்லாமல் குடிநீர் வழங்குவது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் கலெக்டர்களுடன் ஆலோசனை
23 Apr 2024சென்னை, தடையில்லாமல் குடிநீர் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நேற்று 12 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அறிவிப்பு
23 Apr 2024சென்னை, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (ஏப்.24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.