முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு 4 நாட்களில் பரோல் கிடைக்க வாய்ப்பு

சனிக்கிழமை, 13 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் நளினி இன்னும் 4 நாட்களில் பரோலில் வெளியே வர உள்ளதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார்.

நளினி மகள் ஹரித்ரா திருமணத்திற்காக பரோலில் வருகிறார். இதையடுத்து அவரது மகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னைக்கு வர உள்ளதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது. பரோல் ஆவணங்களை வேலூர் சிறை நிர்வாகத்திடம் தந்த பின் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். நளினியின் மகள் திருமணத்திற்கு 6 மாதங்கள் பரோல் கேட்டு வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை ஐகோர்ட் ஒரு  மாத காலம் பரோல் வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

அதே போல, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்திய தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் கையெழுத்திட உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 8-ம் தேதி நளினி வழக்கு தொடர்ந்தார்.

கடந்த ஆண்டு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், 8 மாதங்கள் ஆகியும் இந்த தீர்மானத்தின் மீது இதுவரை கவர்னர் கையெழுத்திடவில்லை. எனவே, அமைச்சரவையின் பரிந்துரையில் கையெழுத்திட கவர்னருக்கு உத்தரவிடவேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது, '7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை பரிந்துரை கவர்னர் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும், கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிடமுடியாது என்றும் கூறியிருந்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா?, இல்லையா? என்பதை முடிவு செய்யும் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட்  ஒத்திவைத்துள்ளது. இதையடுத்து, மேலும் 3 அல்லது 4 நாட்களில் பரோல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக நளினி தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும் பரோலில் வெளியே வரும் நளினி தாங்கும் இடங்கள் குறித்த விவரங்கள் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து