முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்ட மக்களவை சபாநாயகர்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

பாராளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் உள்ளிட்டோர் தூய்மை செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

இந்தியாவின் நகரங்கள், கிராமங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள தெருக்கள், சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு பகுதிகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் நோக்கில் ஸ்வச் பாரத் அபியான் அல்லது ஸ்வச் பாரத் மிஷன் என்ற பெயரிலான திட்டம் கொண்டு வரப்பட்டது.  கடந்த 2014 முதல் 2019-ம் ஆண்டு காலகட்டத்திற்குள் நாடு முழுதும் தூய்மை இந்தியா திட்டத்தினை அமல்படுத்தும் முனைப்பில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மோடி 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்று கொண்டார். அவரது அமைச்சரவை சகாக்களும் முறைப்படி பொறுப்பேற்று கொண்டனர். இதனை தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் தீவிரமுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதே போன்று மத்திய அரசின் ஸ்வச்தா அபியான் (தூய்மை இந்தியா) திட்டத்தின்படி, பாராளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பா.ஜ.க. எம்.பி.க்கள் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், மனோஜ் திவாரி மற்றும் மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் உள்ளிட்டோர் தூய்மை செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அவர்களுடன் கட்சியின் மற்ற பிரமுகர்களும் கலந்து கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து