முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறுவதாக கல்லீஸ் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : ஐ.பி.எல். தொடரில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக கல்லீஸ் அறிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கல்லீஸ் ஐ.பி.எல். தொடரில் இரண்டு சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2015-ம் ஆண்டு பொறுப்பேற்றார்.

கல்லீஸ் தலைமையில் மூன்று முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. இந்த முறை மோசமான தோல்வி, ரன்ரேட் ஆகியவற்றின் அடிப்படையில் லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் அணியை மேம்படுத்த விரும்புகிறது. இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் கல்லீஸ், துணை பயிற்சியாளர் சைமன் காடிச் ஆகியோர் அணியில் இருந்து வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2011-ல் இருந்து வீரர், ஆலோசகர், தலைமை பயிற்சியாளர் என பணியாற்றியுள்ளேன். தற்போது புதிய வாய்ப்பை தேடுவதற்கான நேரம் வந்து விட்டது. ஏராளமான நினைவுகள் உள்ளன. சக வீரர்கள், உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு கட்டாயம் நன்றி கூற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து