முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அக். 31-ம் தேதி வரை கால அவகாசம் தேவை - சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் மனு

திங்கட்கிழமை, 15 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31-ம் தேதி வரை கால அவகாசம் கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.

2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகள் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதம் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டது. இது குறித்து தி.மு.க.வினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு கடந்த ஜூலை 2-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, சுப்ரீம் கோர்ட் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது. இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் நேற்று தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மாநிலத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதனால் வார்டு வரையறை பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அக்டோபர் 31-ம் தேதி வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று கூறி தமிழக தேர்தல் ஆணையம் அவகாசம் கோரியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து