முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. யில் ஆஜராகாத அமைச்சர்களின் பட்டியலை கேட்கும் பிரதமர் மோடி

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பாராளுமன்றத்தில் ஆஜராகாத அமைச்சர்களின் தினசரி அறிக்கையை அனுப்பி வைக்க அமைச்சரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

நேற்று பாராளுமன்றத்துக்கு வரத் தவறிய அமைச்சர்களின் பட்டியலை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியிடம் பிரதமர் மோடி கேட்டுள்ளார். இதன் மூலம் பாராளுமன்றத்திற்கு வரத்தவறிய அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் அமர்வு நடைபெறும் போது, இரு அவைகளிலும் கலந்து கொண்ட அமைச்சர்களின் பட்டியல் இருக்கும். அதாவது, ஒவ்வொரு அமைச்சரும் இரு அவைகளிலும் எத்தனை முறை ஆஜரானார்கள் என்ற தகவல்கள் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு பாராளுமன்ற அமைச்சர் சார்பாக வழங்கப்படுகின்றன. பாராளுமன்றத்திற்கு வரத் தவறிய பல அமைச்சர்கள் பட்டியல் குறித்து நேற்று பிரதமர் மோடி தனது கோபத்தை வெளிப்படுத்தினார். பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது அவையில் இல்லாத சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் குறித்து பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்தார். அமைச்சர்கள் முறையாக அவையில் இருப்பதில்லை என புகார் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் தனக்கு கடிதம் எழுதியிருப்பதாக பா.ஜ.க. பாராளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து