எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களது வருவாயை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், நெசவாளர்கள் தற்போது பெற்று வரும் அகவிலைப் படியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும். இதனால் 1,137 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள சுமார் 2 லட்சம் கைத்தறி நெசவாளர்கள், ஆண்டு ஒன்றுக்கு 14 கோடி ரூபாய் அளவிற்கு பயன் பெறுவார்கள்.
விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி, சேலை ஒன்றுக்கு 39 ரூபாய் 27 காசுகளில் இருந்து 43 ரூபாய் ஒரு காசாகவும், வேட்டி ஒன்றுக்கு 21 ரூபாய்
60 காசுகளில் இருந்து, 24 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். பெடல் தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி, சேலை ஒன்றுக்கு 85 ரூபாய்
67 காசுகளில் இருந்து, 90 ரூபாய் 29 காசுகளாகவும், வேட்டி ஒன்றுக்கு 65 ரூபாய் 75 காசுகளிலிருந்து 69 ரூபாய் 58 காசுகளாகவும் உயர்த்தி வழங்கப்படும். அதே போன்று, விலையில்லா சீருடை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலி, மீட்டர் ஒன்றுக்கு 11 ரூபாய் 32 காசுகளில் இருந்து, 12 ரூபாய் 16 காசுகளாக மாண்புமிகு அம்மாவின் அரசால் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 54 ஆயிரம் விசைத்தறி மற்றும் 10 ஆயிரத்து 500 பெடல் தறி கூலித் தொழிலாளர்கள் சுமார் 11 கோடியே 23 லட்சம் ரூபாய் அளவிற்கு பயன் பெறுவார்கள்.
தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் நபார்டு வங்கியின் மறு நிதியுதவி திட்டத்தின் கீழ் நடைமுறை மூலதனத்தை காசுக்கடனாக பெற்று வருகின்றன. அத்தகைய கடனுக்கு, தற்போது தமிழ்நாடு அரசு 4ரூ மானியமாக வழங்கி வருகிறது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த புதிய ஜவுளி கொள்கை 2019-ல் அறிவிக்கப்பட்டவாறு, வட்டிச் சுமையினைக் குறைக்கும் விதமாக, தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி மானியம் 4 விழுக்காட்டிலிருந்து 6 விழுக்காடாக உயர்த்தப்படும். இதன் மூலம் ஆண்டொன்றுக்கு ஏற்படும் செலவினம், 14 கோடியே 40 லட்சம் ரூபாயிலிருந்து 21 கோடியே 60 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பாதுகாவலனாக விளங்கும் "பனை மரங்களுக்கு’’ மாண்புமிகு அம்மாவின் அரசு முக்கியத்துவம் அளித்து, வறட்சி மிகுந்த மானாவாரி மற்றும் கடற்கரை பகுதிகளில் பனை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்கு, முதற்கட்டமாக நடப்பாண்டில் 10 கோடி ரூபாய் செலவில் 2.5 கோடி பனை விதைகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். இப்பணி வருங்காலங்களிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
2. தரமான இடுபொருட்களை சேமித்து விவசாயிகளுக்கு விநியோகிக்க, மாண்புமிகு அம்மாவின் அரசு, இதுவரை 17 துணை வேளாண்மை விரிவாக்க மையங்களை உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தி உள்ளது. நடப்பாண்டிலும், 100 விதை சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய இம்மையங்களை கட்டுவதற்கு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாட்டில் நிலவும் தட்பவெட்ப நிலை, மிக நீள இழை பருத்தி சாகுபடிக்கு உகந்ததாக உள்ளதாலும், இந்த ரகங்களை சாகுபடி செய்தால், பருத்தி விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கும் என்பதாலும், நடப்பாண்டில், மிக நீள இழைப்பருத்தி ரக விதைகள், உயிர் உரங்கள், பருத்தி அறுவடை இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இடுபொருட்களை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
நமது உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான நுண்ணூட்டச் சத்தினை வழங்கவல்ல சிறுதானியப் பயிர்களை குறைந்த நீரில் சாகுபடி செய்ய முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், மண் வளம் குறைவான நிலப்பகுதிகளிலும் சாகுபடி செய்ய இயலும். எனவே, இப்பயிர்களின் சாகுபடியினை அதிகரித்து, உற்பத்தியை உயர்த்தும் வகையில், தரமான விதை விநியோகம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பிற்கு தேவையான கைத்தெளிப்பான் விநியோகம் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்கள், கருத்தரங்கங்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பயிற்சிகள் போன்ற பணிகளுக்காக நடப்பாண்டில் 13 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை வண்ணாரப்பேட்டையில், வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நகரப்புற மக்களைக் கவரும் வகையில் "தோட்டக்கலை பாரம்பரிய பூங்கா’’ அமைக்கப்படும். கரும்பு விவசாயிகள், குறித்த நேரத்தில் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக கூட்டுறவு சர்க்கரை ஆலை, உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது தனியார் தொழில் முனைவோர் மூலம் இயந்திர வாடகை மையம் அமைக்க இயந்திரங்களுக்கான விலையில் 60 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் 40 சதவிகிதம் அரசு மானியமாக வழங்கி, தற்போது 11 வாடகை மையங்கள் இயங்குகின்றன. நடப்பாண்டில், 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், கூடுதலாக கரும்பு சாகுபடி இயந்திரங்களுக்கான 10 வாடகை மையங்கள் விவசாயிகளின் நலன் கருதி அமைக்கப்படும்.
மானாவாரி விவசாயிகளின் நலனுக்காக, நடப்பாண்டில் மேலும் 150 மதிப்புக்கூட்டும் மையங்களை உருவாக்குவதற்கு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த ஆண்டு, 243 கிராம அளவிலான பண்ணை இயந்திர வாடகை மையங்கள் 19 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளுக்கு உதவும் வகையில், இவ்வியந்திரங்கள் வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் பயன்படுத்துவதற்காக இத்தகைய இயந்திரங்களை வேளாண் பொறியியல் துறை மூலம் விலைக்கு வாங்க 70 கோடியே 30 லட்சம் ரூபாய் நடப்பாண்டில் ஒதுக்கீடு செய்யப்படும்.
தென்னை அதிகம் சாகுபடி செய்யும் மாவட்டமான கன்னியாகுமரியில் தென்னை மதிப்புக் கூட்டும் மையம் ஒன்று 16 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இம்மையத்தில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள கிடங்கு, பரிவர்த்தனைக் கூடம், கடைகள், உலர்களம், சூரிய உலர்த்தி, தூய்மையான தேங்காய் எண்ணெய் உற்பத்தி அலகு, தேங்காய் மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
விவசாயிகளிடையே, தரமான சான்று பெற்ற விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்குக் கிடங்கு வசதியுடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஒரு குழுவிற்கு 60 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு, இதுவரை கிடங்கு வசதியுடன் கூடிய 30 விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில், 12 கோடி ரூபாய் செலவில், 20 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்ய "விலை ஆதரவுத் திட்டம்’’ சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். நடப்பாண்டில் 3,000 மெட்ரிக் டன் பச்சைப் பயறு, 9,000 மெட்ரிக் டன் உளுந்து மட்டுமல்லாது, 50,000 மெட்ரிக் டன் கொப்பரையையும் அரசு நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது. இதற்காக 90 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், 100 உழவர் சந்தைகளிலும் கூடுதலாக கடைகள், மின்னணு எடைமேடை, கணினி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் 268 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தி தரப்படும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் கடன் வசதி பெற்று தொழில் துவங்க, மூலதன உதவி, கடன் உத்தரவாதத் திட்டம், வட்டி உதவித் திட்டம் போன்ற திட்டங்கள் நபார்டு வங்கியின் "நாப்கிசான்’’ நிதி நிறுவன உதவியுடன் செயல்படுத்த நடப்பாண்டில், 266 கோடி ரூபாய் வரை கடன் உதவி அளிக்கப்படும். மதுரை, சேலம், ஈரோடு, தூத்துக்குடி, காஞ்சிபுரம் மாவட்டங்களில், பண்ணை அளவில் விளைபொருட்களை பாதுகாக்க சூரிய சக்தியால் இயங்கும் சிறிய அளவிலான குளிர்பதன அலகுகளை நிறுவிட தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், 100 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி, தருமபுரி, கோயம்புத்தூர், நீலகிரி, திருச்சி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில், பழங்கள், காய்கறிகள் மற்றும் விரைவில் அழுகும் ஏனைய பொருட்களுக்கான "விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம்’’ 482 கோடி ரூபாய் நிதியில், 509 சேகரிப்பு மையங்கள், 62 முதல் நிலை பதப்படுத்தும் அலகுகள் ஆகியவற்றை அமைக்க தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை விரைவில் செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்படும். மேற்கண்ட 10 மாவட்டங்கள் தவிர சேலம், ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில், இத்திட்டம் 100 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படும்.
பாசன நீரினை வீணாக்காமல் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசனநீர் குழாய்களை நிறுவுதல், தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் போன்ற துணை நீர் மேலாண்மை பணிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதேபோன்று, நடப்பாண்டிலும், இப்பணிகளுக்காக மாண்புமிகு அம்மாவின் அரசு 116 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவிடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்து சமய அறநிலையத் துறை
இந்து சமய அறநிலையத் துறை ஆளுகையின் கீழ் இல்லாத, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1,000 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக, நடப்பாண்டு திருக்கோயில் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் 10 கோடி ரூபாய் நிதியுதவி திருக்கோயில் நிதியிலிருந்து வழங்கப்படும்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிதி வசதி இல்லாத 1,000 கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணி மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக, நடப்பாண்டு திருக்கோயில் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் 10 கோடி ரூபாய் நிதியுதவி திருக்கோயில் நிதியிலிருந்து வழங்கப்படும் என்று கூறி அமைகிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.