முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடி காற்றில் அம்மி பறக்காது, பழங்கதை வேண்டாம்: அமைச்சர் ஜெயகுமார் பேச்சால் சபையில் கல கல

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

ஆடி காற்றில் அம்மி பறக்காது, ஆனால் தொடர்ந்து மம்மியின் ஆட்சிதான் நீடிக்கும் என்று  அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கையில் பேசிய திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடிஅருணா தனது உரையை முடிக்கும்போது அடிக்கும் ஆடிக்காற்றில்  அம்மிக்கல்லோடு அம்மா ஆட்சியும் பறந்துவிடும் என்று பேசினார்.

இதற்கு செங்கோட்டையன் ஆடிக்காற்றும் அடிக்கப்போவதுமில்லை, அம்மிக்கல்லும்  பறக்கப்போவதில்லை, ஜெயலலிதா ஆட்சியும் பறக்கப்போவதில்லை என்றார். இதைதொடர்ந்து  பேசிய அமைச்சர் ஜெயகுமார், நீங்கள் இப்படியெல்லாம் பேசுவீர்கள் என்று தெரிந்து தானோ  என்னவோ அம்மிக்கல்லை ஜெயலலிதா மிக்சியாக மாற்றி விட்டார். இப்போது தொழிற்நுட்பம்  மாறி விட்டது எனவே பழங்கதையெல்லாம் வேண்டாம். தமிழகத்தில் அம்மிக்கல்லே இல்லாத  நிலையை மாற்றி அம்மா மிக்சி கொடுத்தவர் மறைந்த முதல்வர் அம்மா. எனவே காற்றடித்தாலும் அம்மி பறக்காது என்றும் மம்மி ஆட்சிதான் நீடிக்கும் என்று தனக்கே உரிய பானியில் தெரிவித்தார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து