முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது

புதன்கிழமை, 17 ஜூலை 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

திருப்பதி கோவிலில் முக்கிய பிரமுகர்களுக்கு தேவஸ்தானம் வி.ஐ.பி. தரிசனத்தை வழங்கி வருகிறது. இதில் எல்-1, எல்-2, எல்-3 என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வி.வி.ஐ.பி.க்கள், வி.ஐ.பி.க்கள் என தரிசனத்திற்கு அனுப்பப்படுகிறது. அனைத்து பக்தர்களையும் சமமாக நடத்துமாறு தேவஸ்தானத்துக்கு உத்தரவிடக் கோரி ஐதராபாத்தை சேர்ந்த உமேஷ் சந்திரா என்பவர், அமராவதியில் உள்ள ஆந்திர ஐகோர்ட்டில் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது வி.ஐ.பி. தரிசனம் தொடர்பான அரசானை நகலை சமர்ப்பிக்குமாறு ஆந்திர அரசிற்கும், தேவஸ்தானத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். மீண்டும் அந்த வழக்கு விசாரணை நடந்த போது தேவஸ்தானம் சார்பில் வி.ஐ.பி. தரிசனம் குறித்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய உள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், புதிய அறங்காவலர் குழு அமைக்கப்படாமல், அதன் தலைவரது அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. இது குறித்து அரசாணை நகலை சமர்ப்பிக்க வேண்டும். வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்து விட்டு, வேறு பெயரில் தரிசனம் வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அதனால் இது குறித்து முழு விவரங்களையும் நாளை(இன்று) சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக சுப்பாரெட்டி பொறுப்பெற்றவுடன், வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய உள்ளதாகவும், முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கு எதிரொலியாக தேவஸ்தானம் தற்போது எல்-1 பிரிவின் கீழ் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தற்போது தீர்த்தம் வழங்குவது மற்றும் சடாரி வைக்கும் சடங்கு கோவிலுக்கு வெளியில் நடத்தப்படுகிறது. எல்-2 பிரிவின் கீழ் ராமுலவாரி மேடை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். எல்-3 பிரிவின் கீழ் (ஜெய, விஜயர்கள் அமைந்துள்ள பகுதி வரை) அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து