முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நடவடிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தேவஸ்­தா­னம் அறி­வித்­துள்­ளது.
திருப்­பதி ஏழு­ம­லை­யானை தரி­ச­னம் செய்­யும் வி.ஐ.பி. பிரேக் முறை­யில் தேவஸ்­தா­னம் சில மாற்­றங்­களை செய்ய முடிவு செய்­துள்­ள­தாக இந்த தேவஸ்­தா­னத்­தின் அறங்­கா­வ­லர் குழு தலை­வர் ஓய்.வி.சுப்­பா­ரெட்டி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

திரு­ம­லை­யில் உள்ள அன்­ன­மைய்யா பவ­னில் அறங்­கா­வல் குழு தலை­வர் ஒய்.வி.சுப்­பா­ரெட்டி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:–

சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கும் விதத்­தில் வி.ஐ.பி. பிரேக் தரி­ச­னத்­தில் லிஸ்ட்– 1, லிஸ்ட்–2, லிஸ்ட்–3 எனும் முறையை உட­ன­டி­யாக தேவஸ்­தா­னம் நீக்­கு­கி­றது. இதன் மூலம் சாமா­னிய பக்­தர்­களை கூடு­த­லாக அனு­ம­திக்­க­லாம். ஒய்.எஸ்.ஆர். காங்­கி­ரஸ் அரசு வந்­த­தும் இதனை அமல்­ப­டுத்­து­வ­தில் மகிழ்ச்சி அடை­கி­றேன். இதற்கு பதி­லாக பழைய முறையை அமல்­ப­டுத்­தும் திட்­ட­மும் உள்­ளது. அதா­வது, அர்ச்­ச­னைக்கு பின்அர்ச்­சனை அனந்­தர தரி­ச­னம் எனும் பழைய முறையை அமல்­ப­டுத்­த­லாம் என ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­கி­றது. இது குறித்து இன்­ன­மும் ஓரிரு நாட்­க­ளில் திட்ட வட்ட அறி­விப்பு வெளி­யி­டப்­ப­டும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து