முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்து விட்டார்: துரைமுருகன் மீது அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

சென்னை : வேலூர் மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்து விட்டார் என்று துரைமுருகன் மீது அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூர் பார்லிமெண்ட் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஜெயகுமார் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க தொண்டர்களே அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள், காரணம் பல ஆண்டுகாலம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், மாவட்ட மக்கள் நலனை பாதுகாக்கவில்லை. தன்னை மட்டுமே வளப்படுத்தி கொண்டார். வேலூர் மாவட்டத்தை வளப்படுத்தவில்லை. மாவட்ட உரிமைகளை தாரை வார்த்து விட்டார். பாலாறு அணை கட்டும்போது தடுத்து நிறுத்தி இருக்கவேண்டும், மாவட்ட மக்களுக்கு துரைமுருகன் துரோகம் செய்து விட்டார்.

அவர் எந்த முகத்தோடு ஓட்டுக்கேட்க வருகிறார். அவருக்கு எதிர்ப்பு இருப்பதை அறிந்து தான் மகன்வேட்பாளர் என்பதால் நாங்கள் வெற்றி பெற்றால் அவர் வெற்றி பெற போவதில்லை என்பது வேறு விசயம். நாங்கள் வெற்றி பெற்றால் மத்திய அரசிடம் பேசி எல்லாத்திட்டங்களையும் வேலூருக்கு கொண்டு வருவோம் என்று துரைமுருகன் கூறுகிறார். அப்படியானால் அவர் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறாரா பா.ஜ.க கூட்டணியில் இருக்கிறாரா என்று தெளிவுப்படுத்த வேண்டும். இதில் இருந்தே காங்கிரஸ் ஆதரவு அவர்களுக்கு இல்லை என்பது தெரிகிறது.

வேலூர் மாவட்ட மாணவர்களுக்கு தனது பொறியியல் கல்லூரிகளில் இலவசமாகவே இடங்களை வழங்கியுள்ளார் ஏ.சி.சண்முகம், மாணவர்களுக்கு கணினி பயிற்சிகளையும் இலவசமாக வழங்கி வருகிறார். அவருக்கு ஆதரித்து நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயகுமார் கேட்டுக்கொண்டார்.

மேலும், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசுகையில்., பாராளுமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க வெற்றி பெற்று விட்டார். 6 ஆயிரம் ரூபாய் தருவோம் கூட்டுறவு வங்கியில் அடகுவைக்கப்பட்ட தங்கநகைகளை மீட்டுக்கொள்ளலாம் என்று தி.மு.கவினர் அளித்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் மோசம் போயிருக்கிறார்கள். மக்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம்புகட்ட வேண்டும்.

தி.மு.க அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்ற மாட்டார்கள். இதை வீடு வீடாக விளக்கினால் மக்கள் தி.மு.கவுக்கு ஓட்டு போட மாட்டார்கள். மு.க.ஸ்டாலின் தன்னிலை மறந்து இறுமாப்புடன் பேசுகிறார். அ.தி.மு.க தொண்டர்கள் தி.மு.கவுக்கு வருவார்கள் என்கிறார். என்ன ஆணவம் என்ன திமிர் தன்னிலை மறந்து ஸ்டாலின் பேசுகிறார். ஸ்டாலினுக்கு வேலூர் மக்கள் சவுக்கடி தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து