முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.250 கோடியில் நோய் தடுப்பு மருந்துகளை இந்தியாவிடமிருந்து வாங்கிய பாகிஸ்தான்

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

இந்தியாவிடம் இருந்து ரூ. 250 கோடி மதிப்புக்கு நோய் தடுப்பு மருந்துகளை பாகிஸ்தான் இறக்குமதி செய்துள்ளது.

இந்தியாவிடம் இருந்து கடந்த 16 மாதங்களில் 250 கோடி மதிப்புக்கு ரேபிஸ் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நச்சு எதிர்ப்பு தடுப்பூசிகளை பாகிஸ்தான் இறக்குமதி செய்து வந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் பிரபல நேஷன் செய்தித்தாள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தேசிய சுகாதார சேவை அமைச்சகம், பாகிஸ்தானின் செனட் நிலைக்குழு முன் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளதாக அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. செனட் உறுப்பினர் ரெஹ்மன் மாலிக், இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ பொருட்களின் விவரங்களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டதையடுத்து, தேசிய சுகாதார சேவை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுடனான உறவு மோசமான நிலைக்கு சென்ற போதிலும், பாகிஸ்தான் தொடர்ந்து தடுப்பு மருந்துகளை இந்தியாவிடம் பெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து