முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசடி வழக்கில் கைதானவர் தண்டனையை குறைக்க வலியுறுத்தி அதிபர் டிரம்புக்கு கருணை மனு

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

150 ஆண்டுகள் சிறை தண்டனையை குறைக்க வலியுறுத்தி நிதி நிறுவன அதிபரான பெர்னி மடோப், டிரம்புக்கு கருணை மனு அனுப்பி உள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல முதலீட்டு ஆலோசகர் பெர்னி மடோப். 81 வயதான இவர் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கி மக்களிடம் இருந்து பல பில்லியன் அமெரிக்க டாலர்களை சுருட்டியது, கடந்த 2008-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய சிட்பண்ட் மோசடியாக இது கருதப்படுகிறது. இந்த வழக்கில் பெர்னி மடோப்புக்கு 150 சிறை தண்டனை விதித்து கடந்த 2009-ம் ஆண்டு ஜூலையில் அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. தற்போது அவர் வடக்கு கரோலினாவில் உள்ள புட்னெர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்ந நிலையில், தனது தண்டனை குறைக்க வலியுறுத்தி பெர்னி மடோப், அதிபர் டிரம்புக்கு கருணை மனு அனுப்பி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து