முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதன்கிழமை, 31 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கையை 30-ல் இருந்து 33 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.. இதில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யக் கூடிய மசோதாக்கள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.  அப்போது சுப்ரீம் கோர்ட்டில் தற்போது இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை தலைமை நீதிபதியை தவிர்த்து 30-ல் இருந்து 33 ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. உரத்திற்கான மானியத்தை 20 சதவீதமாக உயர்த்தியதை அடுத்து 22 ஆயிரத்து 875 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. சிட் பண்ட் முதலீட்டை நடைமுறைப் படுத்துவதற்கான மசோதா மற்றும் புதிய மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து