முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உன்னாவ் பாலியல் வழக்கு விவகாரம்: எம்.எல்.ஏ. குல்தீப் சிங் கட்சியில் இருந்து நீக்கம்

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் ரேபரேலியில் விபத்தில் சிக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். அவருடன் காரில் சென்ற இருவர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் உள்பட 10 மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற உ.பி. அரசு பரிந்துரை செய்தது. இதற்கிடையே, பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான விவகாரத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து