முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் கனமழை எதிரொலி - வதோதராவில் ரயில், விமான சேவை பாதிப்பு

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : குஜராத்தில் பெய்து வரும் கனமழையின் எதிரொலியால் வதோதரா விமான நிலையத்தில் விமானங்களின் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதே போல், வதோதராவில் அமைந்துள்ள விமான நிலைய ஓடுபாதையிலும் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து, விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள இடங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு வருகின்றனர். முதல்வர் விஜய் ரூபானி நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கனமழையால் ஏற்படும் வெள்ள அபாயத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து