முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்குவரத்து விதிகளை கடுமையாக்க ஹெல்மெட் அணியாமல் வண்டிஓட்டினால் ரூ. 1000 அபராதம் - மத்திய அரசின் புதிய சட்ட திருத்தம் விரைவில் அமல்

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இந்தியாவில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டுவோருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கும் புதிய சட்ட திருத்தம் விரைவில் அமலுக்கு வருகிறது.

சாலை போக்குவரத்து விதிகளை கடுமையாக்குவதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்த சட்ட மசோதா கடந்த 23-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நேற்று முன்தினம் மாநிலங்களவையில் இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. புதிய சட்ட திருத்த மசோதாபடி சாலை விதிகளை மீறுபவர்களுக்கு பத்து மடங்கு அதிகமாக அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாவிட்டால் தற்போது ரூ.100 அபராதம் வசூலிக்கப்படுகிறது. சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாதவர்கள் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும். அதுமட்டுமின்றி 3 மாதங்களுக்கு அவர்களது ஓட்டுனர் லைசென்ஸ் முடக்கப்படும்.

ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களுக்கு வழிவிடாதவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் தற்போது ரூ. 500 அபராதம் விதிக்கப்படுகிறது. அதை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தவும், அபராதம் கட்டாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு தற்போது ரூ. 500 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதமும் ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. அல்லது 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதிக எடை கொண்டு செல்பவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் என்ற அபராத தொகையை ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி விதிகளில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. மேலும் ஒரு டன் கூடுதல் எடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மது அருந்தி விட்டு போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தற்போது ரூ. 2 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அளிக்கப்படுகிறது. இந்த அபராத தொகை ரூ.10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கும், சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கும் தற்போது ரூ. 1000 அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த அபராத தொகை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. மேலும் 6 மாதம் முதல் 12 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து